Tuesday 5 April 2011

எளிய இலக்கணம்2- மாத்திரை

மாத்திரை=
தமிழெழுத்துகளை ஒலிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு.
ஒருமுறை கண்ணிமைக்கும் நேரமோ கைவிரலை நொடிக்கும் நேரமோ ஒரு மாத்திரையாகும்.

குறில் 1 மாத்திரை ஒலிக்கும்.
நெடில் 2 மாத்திரை ஒலிக்கும்.
மெய் அரை மாத்திரை ஒலிக்கும்.
சார்பெழுத்துகள் அரைமாத்திரை ஒலிக்கும்.

எழுத்தின் மாத்திரை இயல்புக்கு மேல் மிகுதியாக வேண்டுமெனில் அந்த அளபுடைய எழுத்தைக் கூட்டி எழுதலாம்.
அது அளபெடை எனப்படும்.

காட்டு:
க்+அ= க (1மாத்திரை) குறில்
க்+ஆ= (2 மாத்திரை) நெடில்
காஅ= (3 மாத்திரை) அ அளெபெடுத்துள்ளது.
காஅஅஅ(5 மாத்திரை) அ அளபெடுத்துள்ளது.
கண்ண்ண்ண்(3மாத்திரை) ண் அளபெடுத்துள்ளது.

உயிரெழுத்து அதிகளவாக 12 மாத்திரை வரையில் அளபெடுக்கும்.
மெய்யெழுத்து அதிகளவாக 11 மாத்திரை வரையில் அளபெடுக்கும்.

அவ்வாறே எழுத்தின் அளபைக் குறைத்தும் எழுதலாம். அது குறுக்கம் எனப்படும்.

தொடரும்....

மூலம்: தொல்காப்பியப்பாடம்


2 comments:

  1. ஒரு மாத்திரை அளவு ஒலிப்பதால் தான் குறில் எனவும் இரு மாத்திரை அளவு ஒலிப்பதால் தான் நெடில் எனவும் சொல்லப்படுகிற‌து.

    ReplyDelete
  2. பாடம் அருமை...நன்றி...தொடரட்டும்

    ReplyDelete